எத்தனை மான்களுக்கு
வாய்க்கிறது
வயோதிகத்தில் மரணம் தழுவும்
வாய்ப்பு..!
புள்ளிகளாலும்
பிடறி மயிராலும்
கோடுகளாலும்
வேறுவேறாயினும்
எல்லாக் கண்களிலும்
ரத்தச் சிவப்பு..!
நீண்டு கிடக்கிறது
பாம்புத்தடம்
நச்சு வாசனையோடு..!
கடல் உவர்ப்பின்
காரணத்தை
யாராவது கேட்டிருப்பார்களா
கண்ணீர் சிந்தும்
மீன்களிடம்..!
பயனுள்ளதுதான் வாழ்க்கை
பரிசோதனைக்கூடத்தில்
பட்டாம்பூச்சி..!
இறந்தாலும்
இருந்தாலும்
ஆயிரம் பொன் - சரி
இரந்தால்..?
Wednesday, August 29, 2007
Subscribe to:
Posts (Atom)