Thursday, August 27, 2009

நீண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளி..!


எங்காத்துக்காரரும் சந்தைக்குப் போறாருங்கற மாதிரி நானும் பிளாக் எழுதறேன்னு ஆரம்பிச்சேன்... ரொம்ப சுமாரா ஒரு டிசைனை வெச்சுகிட்டு என்ன செய்றதுனு புரியாததாலும் சோம்பேறித்தனத்தாலும் அப்படியே அதை கிடப்பில் போட்டு வெச்சுட்டேன்..!

எழுதறதுக்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கு..! இப்போ நிறைய நேரமும் இருக்கு! எழுத ஆரம்பிக்கலாம்னு பிள்ளையார் சுழி போட்டிருக்கேன்!

அதுக்கு முன்னே என்னைப் பத்தி கொஞ்சம் சொல்லிடறேன்... ஏன்னா, விசிட் அடிக்கும் எல்லோருக்கும் என்னைப் பத்தி தெரியும்னு நினைச்சா பூனை கண்ணை மூடிகிட்ட கதைதான்!

நான் முருகேஷ் பாபு...

விகடன் என்னுடைய எழுத்து அடையாளம்... இப்போது விலாசம் மாறி இருக்கிறேன்...

இப்போ தெனாலினு ஒரு இணைய தள பத்திரிகையில் இருக்கேன்...

நாளையில் இருந்து எழுதலாம்னு ஐடியா... வேணும், உங்க ஆசீர்வாதம்... அப்புறமா எதிர்வாதம்!

3 comments:

konguthamizh said...

வாழ்த்துகள் நண்பரே

நிகழ்காலத்தில்... said...

பத்திரிக்கை துறை அன்பர் ஆதலால் பல சுவாரசியமான அனுபவங்கள் கிடைத்திருக்கும், அதை உங்கள் நடையில் எழுதுங்கள்

இனி இல்லை இடைவெளி...

வாழ்த்துக்கள்

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் எழுதுங்க வாசிக்கிறோம்