Saturday, July 27, 2013

நன்றி நவிலல்!

மரியா கேண்ட்டீன் படித்தேன் என்று ஒரு போன் அதிகாலையில் எழுப்பியது. வழக்கம்போல் நான் ஜான்ஸ் காலேஜ் ஸ்டூடண்ட் என்றார் போன் செய்த நண்பர்.
என் ப்ரெண்ட் கோவில்பட்டியிலே ஒரு புத்தக கடையிலே மரியா கேண்ட்டீன்னு ஒரு புத்தகம் பார்த்தேன்... பஸ்ஸுல இருந்ததால இறங்கி வாங்க முடியலைனு சொன்னார். உடனே திருநெல்வேலில புத்தக கடைகள்ல விசாரிச்சேன்... வித்துப் போச்சு... ஆர்டர் போட்டு வாங்கித் தர்றேன்னு சொன்னாங்க. அதுமாதிரியே வாங்கியும் கொடுத்தாங்க. எல்லாக் கதைகளையும் படிச்சுட்டேன்... நல்லாயிருக்கு என்றார் அந்த நண்பர்.
என்னை நச்சரித்து கதைகளை வாங்கி புத்தகமாகக் கொண்டு வந்த பட்டாம்பூச்சி பதிப்பகம் நா.ரமேஷ்குமாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
வழக்கம்போல மரியா கேண்ட்டீனுக்கும் நன்றி!

No comments: