Wednesday, November 27, 2013

கிரியேட்டிவ் ஹெட்!

காமேஸ்வரி அத்தை என்ன படித்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அத்தை என்றால் அப்பா கூடப் பிறந்தவரோ இல்லை அம்மாகூடப் பிறந்தவருக்கு வாழ்க்கைப்பட்டவரோ கிடையாது. வேலைக்காக அப்பா ஊர் ஊராகச் சென்றபோது ஒரு ஊரில் நாங்கள் குடிபோன வளவு வீடுகளில் பக்கத்து வீட்டில் குடியிருந்தார் என்பதால் எனக்கு அத்தை!

என்னுடைய பள்ளிக்கூட காலத்தில் என்னை அசத்திய பெண்மணி. அந்த வீட்டுக்குக் குடிபோன ரெண்டாம் நாள் அத்தை எங்கள் வீட்டுக்கு வந்தார். வீட்டின் நிறைகுறைகள் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னார். அப்பாவின் வேலை, அம்மாவின் படிப்பு, எங்களுடைய சொந்த ஊர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் ப\ற்றியும் விசாரிப்பார்கள் என்று காத்திருந்தவருக்கு பெரிய அதிர்ச்சி. எங்கம்மா எதுவுமே கேட்காமல் காபி குடிக்கிறீங்களா என்று மட்டும் கேட்டதும் அத்தைக்கு கொஞ்சம் பொசுக்கென்று போய்விட்டது.

ஆனாலும் சொல்லாமல் போவதாக இல்லை. அங்கேதான் முதன்முதலாக கிரியேட்டிவிட்டி என்றால் என்னவென்று நான் பார்த்தேன். ‘சரிம்மாநான் கிளம்பறேன்உங்க அண்ணாச்சி சாப்பாட்டுக்கு வந்திருவாக...!’ என்றார். எங்க அம்மாவுக்கு வேறு ஆப்ஷனே இல்லை என்பதால், ‘சரி போயிட்டு வாங்கஆமாஅண்ணாச்சி என்ன செய்றாங்க..?’ என்றார்.

ஊரைச் சுத்திட்டு சுத்திட்டு வந்து சாப்புடுவாருஇப்ப பாதி ஊரைச் சுத்தியிருப்பாருபசி வந்ததும் வீட்டுக்கு வந்துருவாருசாப்டுட்டு மீதி ஊரைச் சுத்தப் போவாரு…’ என்றார் அத்தை. கேள்வி கேட்ட அம்மாவுக்கு ஐயோ பாவம் என்றாகிவிட்டது. ஆனால், கழுத்தில் ஒற்றை வடம், காது, மூக்குகளில் கல் வைத்த தங்கம், செழிப்பான புடவை என்று வறுமையில் இருப்பது போல தோற்றமில்லாத அத்தையைப் பார்க்கும்போது செலவுகளை எப்படி சமாளிக்கிறார் என்ற கேள்வியும் எழுந்தது.

ஊரைச் சுத்தறாருன்னா வருமானம்ஏதாச்சும் நிலபுலம் இருக்குதா..? என்றாள் அம்மா! அத்தை சின்ன சிரிப்போடு சொன்னார். ‘அதான் ஒண்ணாந்தேதியானா சம்பளம் வந்திரும்லஊரைச் சுத்தறதுன்னா சும்மா இல்லைஅவரு போஸ்ட் மேனா இருக்காரு…’ என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். அம்மாவுக்கு கடுப்பாக இருந்ததோ என்னவோ தெரியாதுஎனக்கு ஆச்சரியமாக இருந்தது.

என் வீட்டுக்காரர் போஸ்ட் மேனாக இருக்கார் என்று சொல்லியிருந்தால் அது ஒற்றை வரி தகவலாக இருந்திருக்கும். ஆனால், அதற்கு ஒரு திரைக்கதை எழுதி அந்த ஒரு நிமிடத்தில் சோகம், காமடி, ஆச்சரியம் என்று பலவித உணர்வுகளைக் கொண்டு வந்த காமேஸ்வரி அத்தைதான் நான் பார்த்த முதல் கிரியேட்டிவ் ஹெட்! இத்தனைக்கும் அத்தை பள்ளிக்கூட லெவலைத் தாண்டியதில்லை என்றுதான் அவர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர்களுடைய குடும்பத்தில் வருமான ஆதாரம் போஸ்ட் மேன் மாமாதான். அவர் சம்பளத்தில்தான் மாமா, அத்தை, வசந்தா அக்கா, ரவி அண்ணா, சுந்தர் அண்ணா எல்லாரும் சாப்பிட வேண்டும். ரவி அண்ணா வேலைக்காக அதையும் இதையும் முயற்சி செய்து பார்த்து அலைந்து கொண்டிருந்தார். பாதிநேரம் ஏதாவது வேலை விஷயமாக வெளியூரில் அலைந்து கொண்டிருக்கும் கேரக்டர். வசந்தா அக்காவுக்கு மாப்பிள்ளை முடிவாகி இருந்தது. சுந்தர் அண்ணா ஸ்கூல் படித்து முடித்து விட்டிருந்தார்.

இதற்கிடையே நாங்களும் ஊர் மாறி வந்துவிட்டோம். பிறகு ஒருநாள் தென்காசியில் கோவிலுக்கு விளக்கு போட அம்மாவோடு போயிருந்தபோது காமேஸ்வரி அத்தையைப் பார்த்தேன். சுந்தர் அண்ணா என்ன பண்றாங்க..? என்றேன். அவர் பத்தாங்கிளாஸ் முடிச்சான்லஇப்ப விஓவா இருக்கான். என்றார். அடடேபரவாயில்லையேஸ்டேட் கவர்மெண்ட்ல வேலைன்னா நல்ல விஷயம்தான் என்றேன். வேலை நல்ல வேலைதான்அவனுக்கு செலவுக்கு காசு குடுத்துதான் உங்க மாமா சம்பளமெல்லாம் கரையுதுஎன்றார். என்ன சொல்றீங்க அத்தை..? என்றேன். ஆமாப்பாவி ஓன்னா வெட்டி ஆபீசர்னு சொல்ல வந்தேன்பா..! என்றார். சிரித்துக் கொண்டேன். அதன்பிறகு மாமாவைப் போலவே சுந்தர் அண்ணாவும் போஸ்ட் மேன் வேலைக்குப் போய்விட்டார்.

அதன்பிறகு நீண்டநாள் கழித்து அண்ணன் திருமணத்துக்கு பத்திரிகை , கொடுப்பதற்காக போயிருந்தேன். சந்தோஷமாக பத்திரிகையை வாங்கிக் கொண்ட அத்தை, ‘பாபுநீ என்ன பண்றே..?’ என்றார்.

சென்னையிலே மீடியாவுல காமேஸ்வரி அத்தை வேலையைப் பார்த்துகிட்டிருக்கேன்..! என்றேன்!

1 comment:

சேலம் தேவா said...

நம்மிடையே இதுபோன்ற வித்தியாசமான கேரக்டர்கள் பலர் இருக்கிறார்கள். :)