மத்தியான ரயிலில் போய்
இறங்கிய ஒருநாள்
மழை ஈரத்தில்
மண் மணத்திருந்தது...
எதிர் காற்றில்
சருகுகள் கால் தழுவி
சலசலக்க
இரண்டாவது பிளாட்பாரத்தில்
ஒருமுறைஇறங்கியிருக்கிறேன்...
ஆனால், ஒருமுறைகூட
யாரேனும் வரவேற்கக் காத்திருக்கையில்
வந்து இறங்கவாய்த்ததில்லை..!
Tuesday, September 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment