Friday, September 14, 2007

தாம்பத்யம்

இந்தமுறை
நீதான்உடைக்க வேண்டும்.
அதுவரை என்னுள்

எத்தனை காலமானாலும்
எத்தனை கனமானாலும்
நான் சுமப்பேன்
அந்த மௌனத்தை...
அத்தனை கஷ்டமில்லை அது

மௌனத்துக்குமுந்தைய
அந்தக்கடைசி வார்த்தையை விட!

No comments: