Thursday, September 13, 2007

அம்மா வீடு போயிருப்பவளுக்கு...

நம் படுக்கை
ஒழுங்கு குலையாமல் கிடக்கிறது...
என் படுக்கையாக...

நீயில்லாத
நேற்று
நல்ல மழை
கடலில்...

உன் பெயரில் மட்டும்
ஒருநூறு இணைப்புகள்
சென்னைத் தொலைபேசியில்!

கர்ப்பகாலம்
பத்து மாதமாம்...
கண்ணின் பொறியில்
கந்தனைச் செய்தவனும்...
அரைத்த மஞ்சளில் - அவன்
அண்ணனைச் சமைத்தவளும்
அறிவார்களா பிள்ளைப் பேற்றுப் பிரிவை!

No comments: