விகடனின் பலம் வாசகர் கடிதங்கள்! அதில் இருந்து கிடைக்கும் ஐடியாக்கள் எப்போதுமே தனித்துவம் மிக்கதாக இருக்கும். அப்படி ஒரு கடிதம்தான் இந்த கட்டுரையின் ஆதாரம். ‘சென்னை .............. (அரசு அலுவலகத்தைக் குறிப்பிட்டிருந்தார்) கேஷியராகப் பணிபுரியும் என் கணவரை கடந்த ஒருவாரமாகக் காணவில்லை. கடந்த வாரம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அலுவலகத்தில் கேட்டால் பணத்தைக் கையாடி விட்டு ஓடிவிட்டதாகச் சொல்கிறார்கள். அவர் அப்படிப்பட்ட நபரில்லை. எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று ஒரு பெண் எழுதிய கடிதம் எனக்கு அசைன்மெண்டாகத் தரப்பட்டது.
நானும் அந்தப் பெண்மணியைப் பார்த்து விசாரித்து அந்த அலுவலகத்தில் விசாரித்து ஜூனியர் விகடனில் கட்டுரை ஆக்கினேன். ஆனால், அந்த நபர் திரும்ப வரவில்லை. தலைமைச் செயலகம்வரை சென்று பார்த்து அந்த ஊழியரைப் பற்றி விசாரித்தேன். மீண்டும் ஒரு ஃபாலோ அப் செய்தியைக் கொடுத்தேன். மூன்றாவது முறையாக அந்தப் பெண்மணி அலுவலகத்துக்கு வந்தார். எனக்கு அவரை நேரில் சந்திக்கவே சங்கடமாக இருந்தது. என்ன பதில் சொல்வது அந்த அபலைப் பெண்ணுக்கு..? என்ற கேள்வி என்னைக் குடைய சிறு தயக்கத்தோடு ரிசப்ஷனுக்குச் சென்றேன். தன் மகளுடன் வந்திந்தார் அந்தப் பெண்மணி.
‘உங்க கணவர் பற்றிய எந்த புது தகவலும் என்னிடம் இல்லை என்று தாழ்ந்த குரலில் தொடங்கினேன். ‘இல்லை சார்... நான் அதுக்கு வரலை. அவர் இருந்தபோதும் குடும்பத்துக்காக பெரிசா எதுவும் கொட்டிக் கொடுக்கலை. இப்போ அவர் இல்லை. அதனாலும் எனக்கு நஷ்டமில்லை. என் குடும்பத்துக்கு தலைவராக இருந்த மனிதர் இப்போ காணாமல் போயிட்டார். இதுவரை எந்தத் தகவலும் சொல்லாத அந்த ஆளைப் பற்றி பேசறதுக்காக நான் வரலை. ஆனா, என் பொண்ணு நிலைமையைப் பாருங்க...’ என்று அருகில் இருந்த பெண்ணிடம் கையை நீட்ட, அந்தப் பெண் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தார்.
அது +2 தேர்வு மதிப்பெண் பட்டியல்... 90%-க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்திருந்தார் அந்தப் பெண். ‘மேலே என்ன படிக்கப் போறேம்மா..?’ என்றேன்.
‘அதுக்குத்தான் வந்திருக்கேன், உங்க உதவியைத் தேடி! அவளுக்கு என்ஜினியரிங் படிக்கணும்னு ஆசை. மெரிட்ல இடம் கிடைக்கும். என்னால், அவளுக்கு சாப்பாடு போட்டு காலேஜுக்கு அனுப்பவும் முடியும். ஆனால், கட்டணம்... ஆயிரக்கணக்கில் செலவாகுமே... இதுல அடுத்த பொண்ணு வேற +1 படிக்கிறா...’ என்றார் அந்தப் பெண்மணி. கையில் மதிப்பெண் பட்டியலுடம் நின்றிருந்த அந்தப் பெண்மணியைப் பார்த்தபோது எனக்கு ஒருகணம் ஒன்றுமே தோன்றவில்லை. சட்டென்று அதைக் கையில் வாங்கிக் கொண்டு படியேறி ஜே.எம்.டி (இப்போதைய எம்.டி. ஸ்ரீனிவாசன் சார்) அறைக் கதவைத் தட்டினேன்.
உள்ளே நுழைந்து மொத்த விஷயத்தையும் சுருக்கமாகச் சொன்னேன். எவ்ளோ கட்டணம் ஆகும் நாலு வருஷத்துக்கும் சேர்த்து? என்றார். சுமார் 40,000 ரூபாய் ஆகும்னு சொல்றாங்க என்றேன். கொடுத்திடலாம். நாலு வருஷத்துக்கும் சேர்த்து! கட்டண விவரத்தையும் காலேஜுக்கு செக் கொடுக்க வேண்டிய பெயரையும் சொல்லச் சொல்லுங்கள் என்றார். எனக்கு அந்த கணத்தில் என் பிள்ளைக்கு என்ஜினியரிங் கிடைத்தது போல சந்தோஷம் பிறந்தது. அதன்பிறகு நான் விலகிக் கொள்ள விகடன் பி.ஆர்.ஓ (ரேவதி மேடம்... இப்போது அவள் அணியில் இருக்கிறார்) அவர்களிடம் விவரங்களை வாங்கி வேண்டிய உதவிகளைச் செய்தார்.
அடுத்த ஆண்டு திடுமென்று என்னை அழைத்த ஜே.எம்.டி. அந்த குடும்ப தலைவர் மிஸ் ஆன கேஸ் என்னாச்சு என்று விசாரித்தார். ஆள் கிடைக்கவில்லை. ஹேபியஸ் கார்பஸ் போட்டிருக்கிறார்கள். போலீஸ் தேடுகிறது என்று சொன்னதும் அந்த பெண் என்ன படிக்கிறார் என்றார். நான் விசாரித்த மறுநாள் செமஸ்டர் மதிப்பெண் பட்டியலோடு அந்த அம்மா அலுவலகத்துக்கு வந்துவிட்டார். ஜே.எம்.டியிடம் கொடுத்தேன். அடுத்த மகள் பற்றி விசாரித்தார். அவருக்கும் என் ஜினியரிங்தான் விருப்பம் என்றால் பணம் செலுத்த நான் தயார் என்றார். அப்படியே செய்யவும் செய்தார்.
நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. நானும் அந்தக் குடும்பத்தை மறந்துவிட்டேன். திடுமென்று ஒருநாள் அந்தப் பெண்மணி தன் மகளுடன் வந்திருந்தார். கையில் பெரிய தாம்பாளம்... அதில் பழங்கள்... இனிப்புகள்! அதைவிட இருவர் முகத்திலும் சந்தோஷம்! ஜே.எம்.டி-யிடம் அழைத்துச் சென்றேன். கீழே விழுந்த வணங்கிய அந்தப் பெண் படிப்பை முடித்துவிட்டதாகவும் கேம்பஸ் தேர்வில் .......... கம்பெனியில் வேலை கிடைத்திருப்பதாகவும் சொன்னாள் அந்தப் பெண். ‘முதல் மாத சம்பளத்தில் நீங்கள் கொடுத்த 40,000 ரூபாயைக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று பணக் கட்டை எடுத்து தாம்பாளத்தில் வைத்து ஜே.எம்.டி-யிடம் நீட்டினாள் அந்தப் பெண். அந்தத் தட்டில் இருந்து ஒரு இனிப்பை எடுத்துக் கொண்ட ஜே.எம்.டி. எல்லோரையும் உட்காரச் சொல்லிவிட்டு, ‘நான் உங்களுக்குக் கடன் கொடுக்கவில்லை. இந்தப் பணத்தைத் திரும்ப வாங்கிக் கொள்வதற்கு! இது உங்களுக்கு நான் செய்திருக்கும் உதவி. நீங்கள் வேறொரு நபருக்குச் செய்யுங்கள். ஒன்றாக இருக்கும் உதவி பத்தாகப் பெருக வேண்டும் என்றார். அந்தப் பெண் தன் செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.
இப்போது தன் கணவருடன் அமெரிக்காவில் இருக்கிற அந்தப் பெண் நிச்சயம் அதை பத்தாகப் பெருகச் செய்திருப்பாள். கூடவே, அடுத்த ஆண்டு படிப்பு முடித்து கேம்பஸில் தேர்வான அவளுடைய தங்கையும் தன் பங்குக்கு பத்தாக்கி இருப்பாள். நான் பதினொன்றாக்கிக் கொண்டிருக்கிறேன்!
Tuesday, March 29, 2011
Thursday, March 3, 2011
நானும் விகடனும்! 02
விகடன் எனக்கு என்ன கொடுத்தது என்ற யோசனையில் இருந்தபோது சட்டென்று நினைவுக்கு வந்த விஷயம் இது. அது என்ன என்பதற்கு முன்னால் மறுபடியும் விகடன் எடிட்டோரியல் மீட்டிங்..!
புதிய பகுதிகளாக என்னவெல்லாம் கொண்டுவரலாம் என்பது பற்றிய ஒரு விவாதத்தில் எம்.டி. ஒரு ஐடியாவை முன் வைத்தார். அவர் அதிகமாக கடவுள் பற்றி சிலாகித்துப் பேசமாட்டார். ஆனால், அவர் சொன்ன ஐடியாவின் தலைப்பு ஒரு தெய்வம் நேரில் வந்தது. அந்த ஐடியாவுக்கான பின்னணி கதையையும் சொன்னார்.
எம்.டி. பறவைகளை நேசித்து பராமரிக்கும் படப்பை பண்ணையில் விளிம்பு வரை ததும்பும் கிணறு ஒன்று இருக்கிறது. அந்த கிணறைத் தோண்டும் முயற்சியில் பல்வேறு இடங்களில் நீரோட்டம் பார்த்திருக்கிறார்கள். சில இடங்களில் கொஞ்சம் தோண்டவும் செய்திருக்கிறார்கள். எங்கேயுமே தண்ணீர் கிடைக்கவில்லை. எல்லோருமே களைத்துப் போய் அடுத்து என்ன செய்யலாம்... கிணறு தோண்டும் முயற்சியைக் கைவிட்டுவிடலாமா என்ற யோசனையில் இருந்தபோது அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு நபர் அங்கு வந்து கிணறு தோண்டப் போறீங்களா... இந்த இடத்தில் தோண்டிப் பாருங்க என்று ஒரு இடத்தைக் கைகாட்டியிருக்கிறார். அவநம்பிக்கையோடு தோண்ட ஆரம்பித்த தொழிலாளிகள் உற்சாகமாகிவிட்டார்கள். சில அடிகளிலேயே நீர் கசிவைப் பார்த்துவிட்ட அவர்கள், பரபரப்பாகத் தோண்டுவதைத் தொடர, எம்.டி. இடத்தைக் கைகாட்டிய ஆளைத் தேடியிருக்கிறார்.
‘கையில் கம்பு வைத்திருந்ததால் அவரை மாடு மேய்ப்பவர் என்று நினைத்துக் கொண்டோம். உண்மையில் அங்கே எந்த மாடுமே இல்லை. சரி, பக்கத்து ஊர்காரராக இருப்பார் என்ற நினைப்பில் ஆட்களை அனுப்பி பக்கத்து ஊர்களில் எல்லாம் தேடிவிட்டோம். அப்படி ஒரு ஆளே இல்லை. அப்படியானால் வந்தவர் யார்? எப்படி அவரால் இன்றளவும் வற்றாமல் இருக்கும் கிணறைத் தோண்ட இடத்தைக் காட்ட முடிந்தது... கிட்டத்தட்ட முயற்சியைக் கைவிட்ட நேரத்தில் வந்து வழிகாட்டிய அவரைத் தெய்வம் என்று கொள்ளலாமா? அதுபோல பலரும் ஒரு மனிதனை தெய்வமாக உணர்ந்திருப்பார்களே... அந்த அனுபவங்களை எழுதலாமா?’ என்றார். எல்லோரும் ஒப்புக் கொள்ள ஒரு தெய்வம் நேரில் வந்தது..? என்ற தலைப்பில் வாரம் ஒரு பிரபலம் எழுதினார்கள்.
அந்தப் பகுதிக்காக பாடகி வாணி ஜெயராமைப் பேட்டி காணச் சென்றிருந்தேன். போனிலேயே கருத்தைச் சொல்லியிருந்ததால் சம்பவத்தை நினைவுபடுத்தி கோர்வையாக்கி வைத்திருந்தார்.
‘இமயமலைச் சாரலில் நடந்த இசை நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தபோது பாதை பழுதாகிவிட்டது. கார் அதற்கு மேல் செல்லாது என்ற நிலை. நிகழ்ச்சிக்கு அரைமணிநேரம்தான் இருக்கிறது. எப்படிச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த நேபாளி இளைஞர் ஒருவர், என் கையைப் பிடிச்சுகிட்டு வாங்க என்று என்னை மலைப்பாதையில் அழைத்துக் கொண்டு போய் சரியான நேரத்தில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குக் கொண்டுபோய் உட்கார வைத்தார். எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்தபோது அவர் மட்டும் எப்படி முன் வந்தார். நான் எப்படி முகம் தெரியாத அந்த இளைஞரை நம்பிச் சென்றேன் என்பது இதுவரை விடை தெரியாத கேள்விகள்... என்னைப் பொறுத்த அளவில் தெய்வம் நேரில் வந்து என்னை அழைத்துச் சென்றதாகத்தான் நினைக்கிறேன்’ என்று வாணி ஜெயராம் சொல்லிமுடித்தார்.
நிருபராக எனக்கு வேண்டியது கிடைத்துவிட்டது. ஆனால், விகடன் எனக்குக் கொடுத்ததாக நினைக்கும் விஷயம் அடுத்து நடந்ததுதான்!
பேட்டிக்குப் பிறகு பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் பாடிய மேகமே... மேகமே..! என் ஆல்டைம் ஃபேவரிட் என்றேன். சிறு தயக்கம்கூட இல்லாமல் இந்த ஒற்றை ரசிகனுக்காக அந்தப் பாடலை முழுமையாகப் பாடிக் காட்டினார். எந்த ரசிகனுக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு..?!
தெய்வம் நேரில் வந்தது, விகடன் ரூபத்தில்!
புதிய பகுதிகளாக என்னவெல்லாம் கொண்டுவரலாம் என்பது பற்றிய ஒரு விவாதத்தில் எம்.டி. ஒரு ஐடியாவை முன் வைத்தார். அவர் அதிகமாக கடவுள் பற்றி சிலாகித்துப் பேசமாட்டார். ஆனால், அவர் சொன்ன ஐடியாவின் தலைப்பு ஒரு தெய்வம் நேரில் வந்தது. அந்த ஐடியாவுக்கான பின்னணி கதையையும் சொன்னார்.
எம்.டி. பறவைகளை நேசித்து பராமரிக்கும் படப்பை பண்ணையில் விளிம்பு வரை ததும்பும் கிணறு ஒன்று இருக்கிறது. அந்த கிணறைத் தோண்டும் முயற்சியில் பல்வேறு இடங்களில் நீரோட்டம் பார்த்திருக்கிறார்கள். சில இடங்களில் கொஞ்சம் தோண்டவும் செய்திருக்கிறார்கள். எங்கேயுமே தண்ணீர் கிடைக்கவில்லை. எல்லோருமே களைத்துப் போய் அடுத்து என்ன செய்யலாம்... கிணறு தோண்டும் முயற்சியைக் கைவிட்டுவிடலாமா என்ற யோசனையில் இருந்தபோது அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு நபர் அங்கு வந்து கிணறு தோண்டப் போறீங்களா... இந்த இடத்தில் தோண்டிப் பாருங்க என்று ஒரு இடத்தைக் கைகாட்டியிருக்கிறார். அவநம்பிக்கையோடு தோண்ட ஆரம்பித்த தொழிலாளிகள் உற்சாகமாகிவிட்டார்கள். சில அடிகளிலேயே நீர் கசிவைப் பார்த்துவிட்ட அவர்கள், பரபரப்பாகத் தோண்டுவதைத் தொடர, எம்.டி. இடத்தைக் கைகாட்டிய ஆளைத் தேடியிருக்கிறார்.
‘கையில் கம்பு வைத்திருந்ததால் அவரை மாடு மேய்ப்பவர் என்று நினைத்துக் கொண்டோம். உண்மையில் அங்கே எந்த மாடுமே இல்லை. சரி, பக்கத்து ஊர்காரராக இருப்பார் என்ற நினைப்பில் ஆட்களை அனுப்பி பக்கத்து ஊர்களில் எல்லாம் தேடிவிட்டோம். அப்படி ஒரு ஆளே இல்லை. அப்படியானால் வந்தவர் யார்? எப்படி அவரால் இன்றளவும் வற்றாமல் இருக்கும் கிணறைத் தோண்ட இடத்தைக் காட்ட முடிந்தது... கிட்டத்தட்ட முயற்சியைக் கைவிட்ட நேரத்தில் வந்து வழிகாட்டிய அவரைத் தெய்வம் என்று கொள்ளலாமா? அதுபோல பலரும் ஒரு மனிதனை தெய்வமாக உணர்ந்திருப்பார்களே... அந்த அனுபவங்களை எழுதலாமா?’ என்றார். எல்லோரும் ஒப்புக் கொள்ள ஒரு தெய்வம் நேரில் வந்தது..? என்ற தலைப்பில் வாரம் ஒரு பிரபலம் எழுதினார்கள்.
அந்தப் பகுதிக்காக பாடகி வாணி ஜெயராமைப் பேட்டி காணச் சென்றிருந்தேன். போனிலேயே கருத்தைச் சொல்லியிருந்ததால் சம்பவத்தை நினைவுபடுத்தி கோர்வையாக்கி வைத்திருந்தார்.
‘இமயமலைச் சாரலில் நடந்த இசை நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தபோது பாதை பழுதாகிவிட்டது. கார் அதற்கு மேல் செல்லாது என்ற நிலை. நிகழ்ச்சிக்கு அரைமணிநேரம்தான் இருக்கிறது. எப்படிச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த நேபாளி இளைஞர் ஒருவர், என் கையைப் பிடிச்சுகிட்டு வாங்க என்று என்னை மலைப்பாதையில் அழைத்துக் கொண்டு போய் சரியான நேரத்தில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குக் கொண்டுபோய் உட்கார வைத்தார். எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்தபோது அவர் மட்டும் எப்படி முன் வந்தார். நான் எப்படி முகம் தெரியாத அந்த இளைஞரை நம்பிச் சென்றேன் என்பது இதுவரை விடை தெரியாத கேள்விகள்... என்னைப் பொறுத்த அளவில் தெய்வம் நேரில் வந்து என்னை அழைத்துச் சென்றதாகத்தான் நினைக்கிறேன்’ என்று வாணி ஜெயராம் சொல்லிமுடித்தார்.
நிருபராக எனக்கு வேண்டியது கிடைத்துவிட்டது. ஆனால், விகடன் எனக்குக் கொடுத்ததாக நினைக்கும் விஷயம் அடுத்து நடந்ததுதான்!
பேட்டிக்குப் பிறகு பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் பாடிய மேகமே... மேகமே..! என் ஆல்டைம் ஃபேவரிட் என்றேன். சிறு தயக்கம்கூட இல்லாமல் இந்த ஒற்றை ரசிகனுக்காக அந்தப் பாடலை முழுமையாகப் பாடிக் காட்டினார். எந்த ரசிகனுக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு..?!
தெய்வம் நேரில் வந்தது, விகடன் ரூபத்தில்!
Monday, February 28, 2011
நானும் விகடனும்!
நண்பர் அரவிந்தனுக்கு முதல் நன்றி. அவர்தான் நான் பேசும்போதெல்லாம் இதை எழுதுங்க பாபு... நல்ல விஷயங்கள் சொல்றீங்க... இதெல்லாம் உங்க அனுபவமா மட்டும் இல்லாமல் பத்திரிகையாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அடிக்கடி சொல்லிச் சொல்லி என்னை எழுதத் தூண்டினார்.
விகடன் 85-ம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதிலேயே நானும் விகடனும் என்ற பிரபலங்களின் அனுபவப் பகிர்வு இடம்பெற்றிருக்கிறது. ஆனால், இது அந்த டைப் நானும் விகடனும் அல்ல..! விகடன் எனக்குக் கற்றுக் கொடுத்த விஷயங்களைச் சொல்லலாம் என்ற யோசனையோடுதான் எழுதத் தொடங்குகிறேன்.
என்னை பத்திரிகையாளனாக ஆக்கியது விகடன். என்ஜினியரிங் படித்த என் அண்ணன் என்ஜினியராகிவிட்டார். ஆனால் டிகிரி படித்த நான் என்னவாகப் போகிறேன் என்ற பயம் என் பெற்றோரிடம் இருந்துகொண்டேதான் இருந்தது. ஆனால், என் அண்ணனுக்கு முன்னால் என்னை சம்பாதிக்க வைத்தது விகடன். மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே விகடன் ஊழியராகிவிட்டேன்.
அடடே... கொஞ்சம் உபசார வாசனை அடிக்கிறதே... சரி, ரூட்டை மாத்திடலாம்!
உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்து கொண்டிருந்த நேரம்... அனேகமாக 96 போட்டி என்று நினைவு. விகடனில் கிரிக்கெட் தொடர்பாக ஒரு போட்டி வைத்திருந்தோம். அதாவது கோப்பையை வெல்லப் போகும் அணி, அரையிறுதிக்கு வரும் நான்கு அணிகள், வேகமாக 50 அடிக்கும் வீரர், 100 அடிக்கும் வீரர் அதிக விக்கெட்டுகள் எடுக்கப் போகும் பவுலர் என்று பல கேள்விகளோடு இருந்தது அந்தப் போட்டி.
இறுதிப் போட்டி ஞாயிறன்று நடப்பதாக இருந்தது. அந்தப் போட்டியின் முடிவில் விகடன் கேள்வித்தாளில் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும். ஆனால், அதைப் பற்றி எதுவுமே விகடனில் எழுத முடியாது. ஏனென்றால், விகடன் இதழ் முடிக்கும் நாள் சனிக்கிழமை. எப்படி இந்த இக்கட்டை சமாளிப்பது என்ற கேள்வியோடு எடிட்டோரியல் மீட்டிங் நீண்டநேரமாக நடந்து கொண்டிருந்தது.
ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்ல, அணியின் கடைக்குட்டியான நான் கையை உயர்த்தினேன். எம்.டி. (பாலசுப்பிரமணியன் சார்) என்ன என்பது போல பார்த்தார். மெதுவாக எழுந்து சார், நாம இஷ்யூவை ஞாயிற்றுக்கிழமை முடிச்சா என்ன..?’ என்றேன். ஒட்டுமொத்த எடிட்டோரியல் அணியும் அதிர்ந்து போனது. சனிக்கிழமை இரவு இதழ் அச்சுக்குப் போனால்தான் ஞாயிறன்று பிரிண்ட் ஆகி, திங்களன்று கடைகளுக்குச் செல்லும். அதையே காலி செய்வது போல ஐடியா கொடுக்கிறானே... அடிப்படையே தெரியாமல்! என்பதுபோல எல்லோரும் என்னைப் பார்க்க, எம்.டி. கொஞ்சநேரம் கண்களை மூடி யோசித்தார். பிறகு, ‘சொல்லுங்க பாபு... ஞாயிற்றுக் கிழமை இரவு 11.30 மணிக்கு இறுதிப் போட்டி முடியும். அதன் பிறகு என்ன செய்யமுடியும் என்றார்.
நானோ உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு, ‘கேள்விகளுக்கான சரியான பதிலை மட்டும் முதல் பக்கத்தில் போட்டுடலாம். இந்த பதில்களை எழுதிய வெற்றியாளர் விவரம் அடுத்த இதழில்னு போடலாம் சார். உலகக் கோப்பை போட்டியை கவர் பண்ணின மாதிரி ஆகிடும் என்றேன். மீண்டும் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார் எம்.டி. அடுத்து போனை எடுத்து ஜே.எம்.டி-யை அழைத்தார்.
இதழை ஞாயிறன்று முடித்தால் என்ன என்ற கேள்வியோடு அவரை உசுப்ப, பேப்பர் பேப்பராக கணக்குப் போட்டுப் பார்த்த ஜே.எம்.டி. கடைசியாக ஒரு தொகையைச் சொன்னார். அதாவது, சனியன்று இரவு ஷிப்ட், ஞாயிறு பகல் ஷிப்ட் ஊழியர்களுக்கு வேலை இல்லை. ஞாயிறு இரவு ஷிப்ட் ஊழியர்கள் தவிர இன்னும் கொஞ்ச பேர் ஓவர் டைம் செய்ய வேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டுச் சொன்னார். மீண்டும் எம்.டி. சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். பிறகு ஓகே... அப்படியே செய்துடலாம்’ என்று சொன்னார்.
ஒப்பந்தப்படி நான் ஞாயிறன்று அலுவலகத்தில் உட்கார்ந்து போட்டியைப் பார்த்தேன். இதழ் நிர்வாக ஆசிரியர் வீயெஸ்வீ சார் அவருடைய வீட்டில் மேட்ச் பார்த்தார். எம்.டி. அவர் வீட்டில்! போட்டி முடிந்ததும் மூவரும் அந்த கூப்பனை நிரப்பினோம். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் போனில் பேசி சரியான பதில்களை உறுதி செய்து கொண்டோம். 12.00 மணிக்கு அச்சகத்து இயந்திரங்கள் ஓடத் தொடங்கின. முதல் செட் புத்தகம் ரெடியானதும் வழக்கம் போல திங்களன்று காலையில் சென்னை கடைகளுக்கு விற்பனைக்குச் சென்றது. வாசகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.
செவ்வாயன்று மீண்டும் எடிட்டோரியல் மீட்டிங். கையில் ஒரு கட்டு கடிதங்களோடு வந்தார் எம்.டி. வரும்போதே ஜே.எம்.டி-யையும் வரச் சொல்லியிருந்தார். அவர் கொண்டு வந்திருந்த கடிதங்கள் அத்தனையும் உலகக் கோப்பை பற்றிய உடனடி ரியாக்ஷனுக்குக் கிடைத்த பாராட்டுகள். பணக் கணக்கு, ஓவர் டைம் கணக்கைவிட இது பெரிய விஷயம் என்றார். என்னைப் பாராட்டும்விதமாக பணமுடிப்பு கொடுத்தார்.
இப்படித்தான்... எந்த சபையாக இருந்தாலும் உனக்குத் தோன்றும் கருத்தை தைரியமாக முன் வைக்க வேண்டும், அதற்கான முழு திட்டமும் உன்னிடம் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் என்னைப் பாராட்டவில்லை. ஆனால், அதை என்னை உணரச் செய்தார். அதுதான் விகடனின் வெற்றி! இன்று அது என் குணமாகவே மாறியிருக்கிறது.
விகடனுக்கு நன்றி!
விகடன் 85-ம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதிலேயே நானும் விகடனும் என்ற பிரபலங்களின் அனுபவப் பகிர்வு இடம்பெற்றிருக்கிறது. ஆனால், இது அந்த டைப் நானும் விகடனும் அல்ல..! விகடன் எனக்குக் கற்றுக் கொடுத்த விஷயங்களைச் சொல்லலாம் என்ற யோசனையோடுதான் எழுதத் தொடங்குகிறேன்.
என்னை பத்திரிகையாளனாக ஆக்கியது விகடன். என்ஜினியரிங் படித்த என் அண்ணன் என்ஜினியராகிவிட்டார். ஆனால் டிகிரி படித்த நான் என்னவாகப் போகிறேன் என்ற பயம் என் பெற்றோரிடம் இருந்துகொண்டேதான் இருந்தது. ஆனால், என் அண்ணனுக்கு முன்னால் என்னை சம்பாதிக்க வைத்தது விகடன். மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே விகடன் ஊழியராகிவிட்டேன்.
அடடே... கொஞ்சம் உபசார வாசனை அடிக்கிறதே... சரி, ரூட்டை மாத்திடலாம்!
உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்து கொண்டிருந்த நேரம்... அனேகமாக 96 போட்டி என்று நினைவு. விகடனில் கிரிக்கெட் தொடர்பாக ஒரு போட்டி வைத்திருந்தோம். அதாவது கோப்பையை வெல்லப் போகும் அணி, அரையிறுதிக்கு வரும் நான்கு அணிகள், வேகமாக 50 அடிக்கும் வீரர், 100 அடிக்கும் வீரர் அதிக விக்கெட்டுகள் எடுக்கப் போகும் பவுலர் என்று பல கேள்விகளோடு இருந்தது அந்தப் போட்டி.
இறுதிப் போட்டி ஞாயிறன்று நடப்பதாக இருந்தது. அந்தப் போட்டியின் முடிவில் விகடன் கேள்வித்தாளில் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும். ஆனால், அதைப் பற்றி எதுவுமே விகடனில் எழுத முடியாது. ஏனென்றால், விகடன் இதழ் முடிக்கும் நாள் சனிக்கிழமை. எப்படி இந்த இக்கட்டை சமாளிப்பது என்ற கேள்வியோடு எடிட்டோரியல் மீட்டிங் நீண்டநேரமாக நடந்து கொண்டிருந்தது.
ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்ல, அணியின் கடைக்குட்டியான நான் கையை உயர்த்தினேன். எம்.டி. (பாலசுப்பிரமணியன் சார்) என்ன என்பது போல பார்த்தார். மெதுவாக எழுந்து சார், நாம இஷ்யூவை ஞாயிற்றுக்கிழமை முடிச்சா என்ன..?’ என்றேன். ஒட்டுமொத்த எடிட்டோரியல் அணியும் அதிர்ந்து போனது. சனிக்கிழமை இரவு இதழ் அச்சுக்குப் போனால்தான் ஞாயிறன்று பிரிண்ட் ஆகி, திங்களன்று கடைகளுக்குச் செல்லும். அதையே காலி செய்வது போல ஐடியா கொடுக்கிறானே... அடிப்படையே தெரியாமல்! என்பதுபோல எல்லோரும் என்னைப் பார்க்க, எம்.டி. கொஞ்சநேரம் கண்களை மூடி யோசித்தார். பிறகு, ‘சொல்லுங்க பாபு... ஞாயிற்றுக் கிழமை இரவு 11.30 மணிக்கு இறுதிப் போட்டி முடியும். அதன் பிறகு என்ன செய்யமுடியும் என்றார்.
நானோ உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு, ‘கேள்விகளுக்கான சரியான பதிலை மட்டும் முதல் பக்கத்தில் போட்டுடலாம். இந்த பதில்களை எழுதிய வெற்றியாளர் விவரம் அடுத்த இதழில்னு போடலாம் சார். உலகக் கோப்பை போட்டியை கவர் பண்ணின மாதிரி ஆகிடும் என்றேன். மீண்டும் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார் எம்.டி. அடுத்து போனை எடுத்து ஜே.எம்.டி-யை அழைத்தார்.
இதழை ஞாயிறன்று முடித்தால் என்ன என்ற கேள்வியோடு அவரை உசுப்ப, பேப்பர் பேப்பராக கணக்குப் போட்டுப் பார்த்த ஜே.எம்.டி. கடைசியாக ஒரு தொகையைச் சொன்னார். அதாவது, சனியன்று இரவு ஷிப்ட், ஞாயிறு பகல் ஷிப்ட் ஊழியர்களுக்கு வேலை இல்லை. ஞாயிறு இரவு ஷிப்ட் ஊழியர்கள் தவிர இன்னும் கொஞ்ச பேர் ஓவர் டைம் செய்ய வேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டுச் சொன்னார். மீண்டும் எம்.டி. சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். பிறகு ஓகே... அப்படியே செய்துடலாம்’ என்று சொன்னார்.
ஒப்பந்தப்படி நான் ஞாயிறன்று அலுவலகத்தில் உட்கார்ந்து போட்டியைப் பார்த்தேன். இதழ் நிர்வாக ஆசிரியர் வீயெஸ்வீ சார் அவருடைய வீட்டில் மேட்ச் பார்த்தார். எம்.டி. அவர் வீட்டில்! போட்டி முடிந்ததும் மூவரும் அந்த கூப்பனை நிரப்பினோம். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் போனில் பேசி சரியான பதில்களை உறுதி செய்து கொண்டோம். 12.00 மணிக்கு அச்சகத்து இயந்திரங்கள் ஓடத் தொடங்கின. முதல் செட் புத்தகம் ரெடியானதும் வழக்கம் போல திங்களன்று காலையில் சென்னை கடைகளுக்கு விற்பனைக்குச் சென்றது. வாசகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.
செவ்வாயன்று மீண்டும் எடிட்டோரியல் மீட்டிங். கையில் ஒரு கட்டு கடிதங்களோடு வந்தார் எம்.டி. வரும்போதே ஜே.எம்.டி-யையும் வரச் சொல்லியிருந்தார். அவர் கொண்டு வந்திருந்த கடிதங்கள் அத்தனையும் உலகக் கோப்பை பற்றிய உடனடி ரியாக்ஷனுக்குக் கிடைத்த பாராட்டுகள். பணக் கணக்கு, ஓவர் டைம் கணக்கைவிட இது பெரிய விஷயம் என்றார். என்னைப் பாராட்டும்விதமாக பணமுடிப்பு கொடுத்தார்.
இப்படித்தான்... எந்த சபையாக இருந்தாலும் உனக்குத் தோன்றும் கருத்தை தைரியமாக முன் வைக்க வேண்டும், அதற்கான முழு திட்டமும் உன்னிடம் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் என்னைப் பாராட்டவில்லை. ஆனால், அதை என்னை உணரச் செய்தார். அதுதான் விகடனின் வெற்றி! இன்று அது என் குணமாகவே மாறியிருக்கிறது.
விகடனுக்கு நன்றி!
Friday, June 18, 2010
மணிரத்னம் காட்டும் திருநெல்வேலி எங்கே இருக்கிறது?
எல்லோரும் ராவணனைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், திருநெல்வேலிக்காரனான எனக்கு கொஞ்சமும் ஒட்டவில்லை, காரணம் கதையின் களமாகச் சொல்லப்படும் திருநெல்வேலி!
பொதுவாக கதையைப் பார்க்கும்போது இடத்தைப் பார்க்கக் கூடாது என்பார்கள். பொள்ளாச்சியில் படம் எடுத்துவிட்டு ஒரே ஒரு போர்டில் அபத்தமாக ராமநாதபுரம் என்று காட்டுவார்கள். இதிலும் அதேபோல, அங்கங்கே பைன் மரங்களும் ரப்பர் மரங்களும் எட்டிப் பார்த்தாலும் அதை திருநெல்வேலி மலைக் காடு என்று நம்புகிறோம். அதேபோல, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியையும் நம்புகிறோம். அதையெல்லாம் நான் குறைசொல்லவரவில்லை. என் வருத்தமெல்லாம் வேறு!
ரோஜாவின் காலத்தில் இருந்தே மணிரத்னத்துக்கு திருநெல்வேலியின் மீது கோபம் போலிருக்கிறது. அந்தத் தமிழைக் குதறி எடுக்கிறார். ராவணன் அதன் உச்சமாக இருக்கிறது. வாடே, போடே... என்னல... யான் இப்படி? என்பன போன்ற சில வார்த்தைகளை அங்கங்கே போட்டுவிட்டால் அது நெல்லைத் தமிழாகிவிடும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. அவருக்கு வசதிப்படும் நேரத்தில் வட்டார மொழி எட்டிப் பார்க்கிறது.
அந்த மொழியில் கோபம் எபபடி இருக்கும், சிருங்காரம் எப்படி இருக்கும், எக்காளம் எப்படி இருக்கும் என்றெல்லாம் கொஞ்சமும் ஹோம் ஒர்க் பண்ணாமல் தமிழின்மீது லாரியை ஏற்றியிருக்கிறார். அவருடைய உதவியாளராக இருந்த அழகம்பெருமாள் டும் டும் டும் படத்தில் காட்டிய திருநெல்வேலியைப் பார்த்தாவது கொஞ்சம் திருந்தியிருக்கலாம். இதிலும் போட்டோகிராபராக எட்டிப் பார்க்கும் அழகம்பெருமாள் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.
இன்னொருபக்கம், விக்ரமுக்கு ஊர் விக்கிரமசிங்கபுரம் என்கிறார். ஆனால், தங்கச்சி கல்யாணத்தைக் கொண்டுபோய் தங்கக் கோவில் மாதிரியான இடத்தில் நடத்துகிறார். மாப்பிள்ளை குஜரத் சேட்டு என்று சொல்லியிருந்தால்கூட கொஞ்சம் நம்பியிருக்கலாம். நீங்கள் ராவணனோடு சேர்த்து ராவண் எடுக்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் இதை சகித்துக் கொள்ள வேண்டுமா? ஏன், திருநெல்வேலியில் படம்பிடித்துக் கொண்டுபோய் பம்பாயில் காட்ட உங்களுக்கு தைரியம் இல்லையா? அப்படிக் காட்டினால் அம்பானி முதலாளி கோவிச்சுக்குவரோ?
இதையெல்லாமாவது பொறுத்துக் கொள்ளலாம். ப்ரியாமணி கல்யாணத்துக்கு முதல்நாள் மருதாணி வைக்கும் வைபவம் நடக்கிறது. ஒடுக்கப்பட்ட இனம் என்று பொங்கிப் பொங்கிப் பேசும் விக்ரம் அவர்களின் குலத்தில் மருதாணி என்பது எங்கே இருந்து வருகிறது சார்? எங்கள் ஊர் கல்யாணம் எப்படி நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா... உங்கள் சினிமா வசதிக்காக கொஞ்சம் மிகைப்படுத்தலாம்... அதற்காக சேட்டு வீட்டுக் கல்யாணமாக்கி விருந்தில் ஜாங்கிரி போடாதீர்கள்.
நீங்கள் ராமன் கோஷ்டியில் இருந்துகொண்டு ராவணன் எடுக்கிறீர்கள்... மேல்குடியில் இருந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையை அபத்தமாகச் சொல்கிறீர்கள் என்றெல்லாம் பெரிய குற்றச்சாட்டுகளை நான் வைக்கவில்லை. எங்க திருநெல்வேலி தமிழைக் கையில் எடுத்து காலி பண்ணாதீங்கனுதான் சொல்றேன்!
பொதுவாக கதையைப் பார்க்கும்போது இடத்தைப் பார்க்கக் கூடாது என்பார்கள். பொள்ளாச்சியில் படம் எடுத்துவிட்டு ஒரே ஒரு போர்டில் அபத்தமாக ராமநாதபுரம் என்று காட்டுவார்கள். இதிலும் அதேபோல, அங்கங்கே பைன் மரங்களும் ரப்பர் மரங்களும் எட்டிப் பார்த்தாலும் அதை திருநெல்வேலி மலைக் காடு என்று நம்புகிறோம். அதேபோல, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியையும் நம்புகிறோம். அதையெல்லாம் நான் குறைசொல்லவரவில்லை. என் வருத்தமெல்லாம் வேறு!
ரோஜாவின் காலத்தில் இருந்தே மணிரத்னத்துக்கு திருநெல்வேலியின் மீது கோபம் போலிருக்கிறது. அந்தத் தமிழைக் குதறி எடுக்கிறார். ராவணன் அதன் உச்சமாக இருக்கிறது. வாடே, போடே... என்னல... யான் இப்படி? என்பன போன்ற சில வார்த்தைகளை அங்கங்கே போட்டுவிட்டால் அது நெல்லைத் தமிழாகிவிடும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. அவருக்கு வசதிப்படும் நேரத்தில் வட்டார மொழி எட்டிப் பார்க்கிறது.
அந்த மொழியில் கோபம் எபபடி இருக்கும், சிருங்காரம் எப்படி இருக்கும், எக்காளம் எப்படி இருக்கும் என்றெல்லாம் கொஞ்சமும் ஹோம் ஒர்க் பண்ணாமல் தமிழின்மீது லாரியை ஏற்றியிருக்கிறார். அவருடைய உதவியாளராக இருந்த அழகம்பெருமாள் டும் டும் டும் படத்தில் காட்டிய திருநெல்வேலியைப் பார்த்தாவது கொஞ்சம் திருந்தியிருக்கலாம். இதிலும் போட்டோகிராபராக எட்டிப் பார்க்கும் அழகம்பெருமாள் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.
இன்னொருபக்கம், விக்ரமுக்கு ஊர் விக்கிரமசிங்கபுரம் என்கிறார். ஆனால், தங்கச்சி கல்யாணத்தைக் கொண்டுபோய் தங்கக் கோவில் மாதிரியான இடத்தில் நடத்துகிறார். மாப்பிள்ளை குஜரத் சேட்டு என்று சொல்லியிருந்தால்கூட கொஞ்சம் நம்பியிருக்கலாம். நீங்கள் ராவணனோடு சேர்த்து ராவண் எடுக்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் இதை சகித்துக் கொள்ள வேண்டுமா? ஏன், திருநெல்வேலியில் படம்பிடித்துக் கொண்டுபோய் பம்பாயில் காட்ட உங்களுக்கு தைரியம் இல்லையா? அப்படிக் காட்டினால் அம்பானி முதலாளி கோவிச்சுக்குவரோ?
இதையெல்லாமாவது பொறுத்துக் கொள்ளலாம். ப்ரியாமணி கல்யாணத்துக்கு முதல்நாள் மருதாணி வைக்கும் வைபவம் நடக்கிறது. ஒடுக்கப்பட்ட இனம் என்று பொங்கிப் பொங்கிப் பேசும் விக்ரம் அவர்களின் குலத்தில் மருதாணி என்பது எங்கே இருந்து வருகிறது சார்? எங்கள் ஊர் கல்யாணம் எப்படி நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா... உங்கள் சினிமா வசதிக்காக கொஞ்சம் மிகைப்படுத்தலாம்... அதற்காக சேட்டு வீட்டுக் கல்யாணமாக்கி விருந்தில் ஜாங்கிரி போடாதீர்கள்.
நீங்கள் ராமன் கோஷ்டியில் இருந்துகொண்டு ராவணன் எடுக்கிறீர்கள்... மேல்குடியில் இருந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையை அபத்தமாகச் சொல்கிறீர்கள் என்றெல்லாம் பெரிய குற்றச்சாட்டுகளை நான் வைக்கவில்லை. எங்க திருநெல்வேலி தமிழைக் கையில் எடுத்து காலி பண்ணாதீங்கனுதான் சொல்றேன்!
Wednesday, June 16, 2010
என் குடும்ப மரம்!
இதுதான் வேர்!
சங்குபுரம்... ராயகிரிக்குப் பக்கத்தில் இருக்கிறது. ராயகிரி சேத்தூருக்குப் பக்கத்தில் இருக்கிறது. சேத்தூர் ராஜபாளையத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது.
ராஜபாளையம் இப்போதுதான் வறண்டபூமியாகிக் கொண்டிருக்கிறது. சேத்தூர் அதற்கு சில ஆண்டுகள் முன்னமே... ராயகிரி அதற்கும் பல ஆண்டுகள் முன்னதாகவே... அப்படியானால் சங்குபுரம் சில தலைமுறைகளுக்கு முன்னேயே வறண்டு போய்விட்டது.
அந்த வறட்சியின் கொடுமை தாங்காமல் கிருஷ்ணன் தன் மூன்று மகன்களையும் அழைத்துக் கொண்டு மனைவி வழி சொந்தங்கள் வாழும் ஊரைத் தேடி நடக்கிறார் பஞ்சம் பிழைக்க..! அந்த முதல் அடியில் இருந்துதான் என் குடும்ப சரித்திரம் தொடங்குகிறது! அதற்கு முன்பு கிருஷ்ணன் குடும்பம் என்னவாக இருந்தது, அவருடைய கிழவியை எப்படிக் கல்யாணம் முடித்துக் கொண்டார் என்பதைச் சொல்ல ஆளில்லை.
’பொண்டாட்டி ஊரோடு வந்துட்டாலும் மீசை முறுக்கைக் கைவிடாத மனுஷன். அவங்க கண் பார்வையில இருக்கலாமே ஒழிய கைநிழலுல இருக்கக் கூடாதுனு வைராக்கியமா வாழ்ந்த மனுஷன். சின்னதா ஒரு குடிலைப் போட்டுகிட்டு அன்னாடம் உழைச்சு குடும்பம் குழந்தைகளைக் காபந்து பண்ணிகிட்டுக் கிடந்த மனுஷனுக்குக் கை ஓய்ஞ்சு போனதும் ஊரு நினைப்பு வந்துடுச்சு. என் சுத்து சொந்தங்களை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரட்டா...’னு சொல்லிட்டு சங்கோரத்துக்குப் புறப்பட்டுப் போனாரு உங்க தாத்தன். வெற்றிலையோடு குடும்ப வரலாற்றையும் போட்டு ஒதுக்கிக் கொண்டு சாறு ஒழுகும் வாயோடு கதை சொன்னாள் கடைசி வீட்டு ஆச்சி! அந்த கிருட்டினன் கிழவனின் மூன்றாவது மருமகள்.
போன மனுஷனைப் பத்தி ஒரு பூவுக் காலமா ஒரு தாக்கலும் இல்லை. என்னாச்சுனு வீட்டுப் பொம்பளை… அதான் எங்க மாமியார்காரி புலம்ப நடுள்ள பிள்ளையை அதான் எங்க சின்ன மச்சானைக் கையிலே புடிச்சுகிட்டுக் கிளம்பினாரு எங்க மாமியாரோட அண்ணன் பெரிய போத்தி. அதான் எங்க பெரியய்யா!
இன்னைக்கப் போல அன்னைக்கு காரு பஸ்ஸெல்லாம் பெருசாக் கிடையாதே... பெரிய போத்தியும் எங்க சின்ன மச்சானும் நடந்தே போகையிலே முக்கால்வாசி தூரம் கடந்திருக்கையிலே எதுத்தாப்புல வந்தான் ஏகாளி.
அய்யா... தாக்கல் கிடைச்சு வர்றீகளா... இல்லை தானா வர்றீங்களா... நேத்து ரத்திரி நம்ம கிட்டுனன் ஐயா தவறிப் போனாருன்னு மூச்சுவாங்கி நின்னான் ஏகாளி.
ஒருநாழிகை கலங்கி நின்ன பெரிய போத்தி, நீ அப்படியே போய் தங்கச்சிகிட்டே தகவல் சொல்லி கடைசிகாரியங்களை செய்யச் சொல்லிடு... நான் மருமவனைக் கூட்டிக்கிட்டு சங்கோரத்துக்குப் போறேன்னு சொல்லிட்டு நடையை விரசாப் போட்டாரு. மூத்த மகன் இருந்தாலும் அப்பனுக்குக் கொள்ளி போடுற பாக்கியம் அடுத்த மகனுக்குதான் அமைஞ்சுது. இதுதான் விதினு வெத்திலையைத் துப்பிட்டு வெள்ளைச் சேலையில் வாயைத் துடைச்சுகிட்டு போயிட்டா கடைசிவீட்டு ஆச்சி!
என்னதான் பஞ்சம்னு பாதை விலகி வந்துட்டாலும் தன் உசுரு சொந்த ஊருலதான் போகணும்னு வைரக்கியமா இருந்த எங்க தாத்தனோட தாத்தனை நினைக்கையில் பிரமிப்பா இருக்கு.
தாத்தனுக்கு அங்கே கொள்ளி போட்டு குடம் உடைக்கையிலே இங்கே கிழவிக்கு எல்லா காரியமும் ஆகி கண்ணீர் வத்திப் போச்சு! அதோட ஊர் தடமும் அழிஞ்சு சொந்த ஊரு குற்றாலம் பக்கத்துல இருக்கற கொட்டாகுளம்னு ஆகிப் போச்சு!
அங்கேதான் ஆரம்பிச்சது எங்க தாத்தனோட அப்பா சிதம்பரத்தோட சீரான ஆட்சி! அவரு பேரு சிதம்பரம்... ரயில்வே ஊழியர்... ஆனா, அங்கே அவரு பேரு சுப்பையா! ஏன் அப்படி?
சொல்றேன் அந்த சுவாரஸ்யமான கதையை!
சங்குபுரம்... ராயகிரிக்குப் பக்கத்தில் இருக்கிறது. ராயகிரி சேத்தூருக்குப் பக்கத்தில் இருக்கிறது. சேத்தூர் ராஜபாளையத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது.
ராஜபாளையம் இப்போதுதான் வறண்டபூமியாகிக் கொண்டிருக்கிறது. சேத்தூர் அதற்கு சில ஆண்டுகள் முன்னமே... ராயகிரி அதற்கும் பல ஆண்டுகள் முன்னதாகவே... அப்படியானால் சங்குபுரம் சில தலைமுறைகளுக்கு முன்னேயே வறண்டு போய்விட்டது.
அந்த வறட்சியின் கொடுமை தாங்காமல் கிருஷ்ணன் தன் மூன்று மகன்களையும் அழைத்துக் கொண்டு மனைவி வழி சொந்தங்கள் வாழும் ஊரைத் தேடி நடக்கிறார் பஞ்சம் பிழைக்க..! அந்த முதல் அடியில் இருந்துதான் என் குடும்ப சரித்திரம் தொடங்குகிறது! அதற்கு முன்பு கிருஷ்ணன் குடும்பம் என்னவாக இருந்தது, அவருடைய கிழவியை எப்படிக் கல்யாணம் முடித்துக் கொண்டார் என்பதைச் சொல்ல ஆளில்லை.
’பொண்டாட்டி ஊரோடு வந்துட்டாலும் மீசை முறுக்கைக் கைவிடாத மனுஷன். அவங்க கண் பார்வையில இருக்கலாமே ஒழிய கைநிழலுல இருக்கக் கூடாதுனு வைராக்கியமா வாழ்ந்த மனுஷன். சின்னதா ஒரு குடிலைப் போட்டுகிட்டு அன்னாடம் உழைச்சு குடும்பம் குழந்தைகளைக் காபந்து பண்ணிகிட்டுக் கிடந்த மனுஷனுக்குக் கை ஓய்ஞ்சு போனதும் ஊரு நினைப்பு வந்துடுச்சு. என் சுத்து சொந்தங்களை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரட்டா...’னு சொல்லிட்டு சங்கோரத்துக்குப் புறப்பட்டுப் போனாரு உங்க தாத்தன். வெற்றிலையோடு குடும்ப வரலாற்றையும் போட்டு ஒதுக்கிக் கொண்டு சாறு ஒழுகும் வாயோடு கதை சொன்னாள் கடைசி வீட்டு ஆச்சி! அந்த கிருட்டினன் கிழவனின் மூன்றாவது மருமகள்.
போன மனுஷனைப் பத்தி ஒரு பூவுக் காலமா ஒரு தாக்கலும் இல்லை. என்னாச்சுனு வீட்டுப் பொம்பளை… அதான் எங்க மாமியார்காரி புலம்ப நடுள்ள பிள்ளையை அதான் எங்க சின்ன மச்சானைக் கையிலே புடிச்சுகிட்டுக் கிளம்பினாரு எங்க மாமியாரோட அண்ணன் பெரிய போத்தி. அதான் எங்க பெரியய்யா!
இன்னைக்கப் போல அன்னைக்கு காரு பஸ்ஸெல்லாம் பெருசாக் கிடையாதே... பெரிய போத்தியும் எங்க சின்ன மச்சானும் நடந்தே போகையிலே முக்கால்வாசி தூரம் கடந்திருக்கையிலே எதுத்தாப்புல வந்தான் ஏகாளி.
அய்யா... தாக்கல் கிடைச்சு வர்றீகளா... இல்லை தானா வர்றீங்களா... நேத்து ரத்திரி நம்ம கிட்டுனன் ஐயா தவறிப் போனாருன்னு மூச்சுவாங்கி நின்னான் ஏகாளி.
ஒருநாழிகை கலங்கி நின்ன பெரிய போத்தி, நீ அப்படியே போய் தங்கச்சிகிட்டே தகவல் சொல்லி கடைசிகாரியங்களை செய்யச் சொல்லிடு... நான் மருமவனைக் கூட்டிக்கிட்டு சங்கோரத்துக்குப் போறேன்னு சொல்லிட்டு நடையை விரசாப் போட்டாரு. மூத்த மகன் இருந்தாலும் அப்பனுக்குக் கொள்ளி போடுற பாக்கியம் அடுத்த மகனுக்குதான் அமைஞ்சுது. இதுதான் விதினு வெத்திலையைத் துப்பிட்டு வெள்ளைச் சேலையில் வாயைத் துடைச்சுகிட்டு போயிட்டா கடைசிவீட்டு ஆச்சி!
என்னதான் பஞ்சம்னு பாதை விலகி வந்துட்டாலும் தன் உசுரு சொந்த ஊருலதான் போகணும்னு வைரக்கியமா இருந்த எங்க தாத்தனோட தாத்தனை நினைக்கையில் பிரமிப்பா இருக்கு.
தாத்தனுக்கு அங்கே கொள்ளி போட்டு குடம் உடைக்கையிலே இங்கே கிழவிக்கு எல்லா காரியமும் ஆகி கண்ணீர் வத்திப் போச்சு! அதோட ஊர் தடமும் அழிஞ்சு சொந்த ஊரு குற்றாலம் பக்கத்துல இருக்கற கொட்டாகுளம்னு ஆகிப் போச்சு!
அங்கேதான் ஆரம்பிச்சது எங்க தாத்தனோட அப்பா சிதம்பரத்தோட சீரான ஆட்சி! அவரு பேரு சிதம்பரம்... ரயில்வே ஊழியர்... ஆனா, அங்கே அவரு பேரு சுப்பையா! ஏன் அப்படி?
சொல்றேன் அந்த சுவாரஸ்யமான கதையை!
Thursday, November 26, 2009
மன்மோகன் சிங்கைக் கடித்த பாம்பைச் சுட்ட விஜய்!
செக்கச் செவேலென அந்தப்புரம் சினிமாவில் வருவது போன்ற செவ்வக் காட்டின் நடுவே எங்கள் வீடு... இப்போ இருக்கும் வீடு இல்லை... இதைக் கட்டுவதற்கு முன்பு இருந்த வீடு. காரை பெயர்ந்தும் லேசாக செம்மண் வழிந்தும் இருக்கும் வீடு... அந்த வீட்டில் எனக்கு மிகவும் பிடித்த இடமான முன்பக்கத்து குச்சிலில் உட்கார்ந்து நேற்று புதிதாக வாங்கிய கார்போன் மொபைலில் பேசிக் கொண்டிருந்தேன்.
ஜன்னலோரமாக நின்று பேசிக் கொண்டிருந்த என் கவனத்தை ஈர்த்தாள் என்னோடு அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் படித்த கிருஷ்ணம்மாள். இப்போ போலீஸ் வேலையில் இருக்கிறாள். ஆனால் நான் பார்த்தபோது அவள் யூனிஃபார்மில் இல்லை. நைட்டி போல ஒரு உடையை அணிந்துகொண்டு என்னை நோக்கி வந்தாள். ஜன்னல் வழியே கைகளை வெளியே நீட்டி அவள் கரங்களைப் பிடித்து நலம் விசாரித்தேன்.
மலர்ந்த கண்களோடு கைகளை எட்டிப் பிடித்தவள், சட்டென்று கணநேரத்தில் முகம் மாறி கண்களில் நீரோடு கைகளை விடுவித்துக் கொண்டு போனாள். சற்று தள்ளி இரண்டு காவலர்களும் ஒரு காவலப் பெண்ணும் சீருடையில் இருக்க, கிருஷ்ணம்மாளும் சீருடை அணிந்தபடி அழுத கண்களோடு அவர்கள் பின்னால் நடந்து சென்றாள்.
நான் கைபேசி உரையாடலைத் தொடர்ந்தபடி அண்ணாந்து பார்த்தேன். சிதிலமகி இருந்த என் வீட்டுக் குச்சிலுக்கு மேலே படர்ந்திருந்த பெரிய மரத்தின் கிளையில் பெரிய பாம்பொன்று நகரமுடியாமல் நகர்ந்து கீழிறங்கிக் கொண்டிருந்தது. நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்த கணத்தில் குச்சிலுக்கு உள்ளே நுழைந்த என் தாயும் அந்தப் பாம்பைப் பார்த்துவிட்டார்.
நம்ம வீட்டு பாம்புதான் அது என்று அம்மா எனக்கு அந்தப் பாம்பை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த நொடியில் அந்தப் பாம்பு மரத்தில் இருந்த மிகப் பெரிய பொந்துக்குள் தன்னை நுழைக்கத் தொடங்கியிருந்தது.
நம்ம வீட்டுப் பாம்பு அதுக்குள்ளே போகாதே... இது வேற ஏதோ பாம்பு! என்று பதறிய அம்மா, குச்சிலுக்குக் கீழே இருந்த பங்கருக்குள் படுத்திருந்த அப்பாவை எழுப்பச் சொன்னாள். அப்பா என் பிள்ளைகளுக்காக வாங்கிப் போட்டிருந்த இரண்டு அடுக்குக் கட்டிலின் கீழ் பாகத்தில் படுத்திருந்தார். மேலே உள்ள கட்டிலில் தலைவரையில் போர்த்திக் கொண்டு படுத்திருந்தது யார் என்று தெரியவில்லை.
சின்னதாகக் குரல் எழுப்பியும் சைகை காட்டியும் அப்பாவை எழுப்பிவிட்டேன். மேலே பொந்துக்குள் நுழைந்த பாம்பு அதன் வழியாகக் கீழிறங்கி கட்டிலில் நகரத் தொடங்கியது. மேல் கட்டிலில் படுத்திருந்தவரின் அருகில் நீளமாகக் கிடந்த பாம்பு புஸ் புஸ் என்று மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது.
பங்கரை விட்டு வெளியே வந்த அப்பாவிடம் பாம்பு பற்றிச் சொன்னதும் அய்யோ என் பை என்றபடி மறுபடியும் பங்கருக்குள் நுழைந்து தன் பையை எடுத்துக் கொண்டு வெளியேறும்போது தன்னையறியாமல் கட்டிலை அசைத்ததோடு லேசாக கத்தியும் விட்டார்.
அப்பா போட்ட சத்தத்தில் மேல் கட்டிலில் படுத்திருந்தவர் போர்வையை விலக்க... அட... தலை டர்பன், தாடி சகிதம் மன்மோகன் சிங்! போர்வையை விலக்கிப் பார்த்த மன்மோகன் சிங் மூக்கருகே இருந்த பாம்பு படக்கென்று அவர் மூக்கைக் கடித்துவிட்டது.
என்ன நினைத்ததோ கடித்தவேகத்தில் சரசரவென்று கீழிறங்கத் தொடங்கியது. நானும் அப்பாவும் வேகமாக மேலேறி வந்து பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு பார்க்க, என் வீட்டு குச்சிலின் வாசலில் நின்ற இளைய தளபதி விஜய் அந்தப் பாம்பை தன் கைத்துப்பாக்கியால் பட்டென்று சுட்டு வீழ்த்தினார்.
இந்தத் துப்பாக்கி சத்தம் கேட்டு நான் கண்விழித்தபோது மணி மூன்றரை! நான் திடுக்கிட்டு எழுந்த சத்தத்தில் விழித்த மனைவி என்ன கனவா..? என்றார்.
ஆமா... பாம்பு கனவு? என்றேன்.
கனவுல வந்த பாம்பு கடிச்சுதா, இல்லை போயிடுச்சா... ஏன்னா, கனவுல பாம்பு கடிச்சாத்தான் நல்லது நடக்கும்பாங்க!” என்றார்.
கடிச்சுடுச்சு! என்று சொல்லிவிட்டு மொடக்கென்று தண்ணீரைக் குடித்தேன்.
அப்போ நல்ல விஷயம் நடக்கும் என்று சொல்லிவிட்டு தூக்கத்தைத் தொடர்ந்தார் என் மனைவி.
யாருக்கு நல்ல விஷயம்... கனவு கண்ட எனக்கா, இல்லை கடிபட்ட மன்மோகன் சிங்குக்கா?!
Wednesday, November 11, 2009
கதையின் கதை - 2
இலையில் உட்கார்ந்து நிமிர்ந்து பார்த்தேன். கை வைத்த பனியன், சமையலறை அழுக்கு வேட்டி, துண்டுடன் கையில் கேசரி வாளியோடு பரிமாறக் காத்திருந்தார் கந்தன் சித்தப்பா, அதே குறுஞ்சிரிப்போடு!
சம்சாரி கதையின் முத்தாய்ப்பான வார்த்தைகள் இவை. அந்தக் கதையில் வலி நிறைந்த வார்த்தைகளும் அவைதான்! ஆனால், அந்த வரிகள் நூறு சதவிகிதம் நிஜம். அதிலும் கந்தன் சித்தப்பாவை அந்தக் கோலத்தில் நான் பார்த்தது என் சகோதரனின் திருமணத்தில்!
கந்தன் சித்தப்பாவின் சகோதரர் வீட்டில் இருந்து கொஞ்சநாளிலேயே மாற்றிக் கொண்டு மீண்டும் எங்கள் கிராமத்துக்கு வந்துவிட்டாலும் அந்தக் காம்பவுண்டில் இருந்த அத்தனை வீடுகளிலும் எங்கள் உறவு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அந்த வகையில் அந்த காம்பவுண்டில் எல்லோருடைய வீட்டுக்கும் பத்திரிகை வைத்துவிட்டுத்தான் வந்திருந்தோம். ஆனால், அவர் அப்போது சமையல் காண்ட்ரக்டரிடம் பறிமாறுபவராக வேலை பார்க்கும் விஷயம் தெரியாது. அதே சமையல் காண்ட்ராக்டரை நாங்கள் எங்கள் வீட்டு திருமணத்துக்கு அழைக்க, அவரை கெடுபிடி செய்து பறிமாற அழைத்து வந்துவிட்டார் சமையல்காரர்.
பத்திரிகை வைத்து அழைத்திருந்தாலும் அவரால் பந்தியில் உட்கார்ந்து சாப்பிடமுடியவில்லை. இந்தக் கதையில் ஒரு விவசாயி வீழ்ந்து போன சோகத்தைப் பதிவு செய்யும் நோக்கத்தில் சம்பவங்களை அமைத்துவிட்டேன். ஆனால், கல்யாணத்துக்கு முந்தையநாள் இரவும், பறிமாறும் வாளியோடு அவர் தயாரான தருணத்திலும் அவருடைய உள்மன போராட்டங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் பதிவு செய்யமுடியவில்லை.
என்னைப் பார்த்ததும் கந்தன் சித்தப்பா, ‘ஏய் பாபு... எப்படியிருக்கே... மெட்ராஸ்ல வேலை பாக்கியாமே... அண்ணாச்சி சொன்னாவோ! என்னடே இப்படிப் பாக்கே... வெள்ளை வேட்டி சட்டை பொட்டுகிட்டு நின்னா அழுக்காயிரும்லா!” என்றார் அதே குறுஞ்சிரிப்போடு! அந்தச் சிரிப்பு என்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தியது.
எத்தனை கந்தன் சித்தப்பாக்கள் விவசாயத்தைக் கைவிட்டு (அல்லது விவசாயம் அவர்களைக் கைவிட்டு) இப்படி நிற்கிறார்களோ..!
(இந்தக் கதை விகடனில் வந்த விஷயம் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு பிரதி வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். என்னுள் குறுகுறுக்கும் குற்ற உணர்வைப் போல அவரிடம் பத்திரமாக இருக்கிறது அந்தக் கதை!)
Subscribe to:
Posts (Atom)
